you are here Home » அரசியல்

அரசியல்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
தலைவர் ரேசில் 9 பேர்

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.எஸ்.அழகரி. பொறுப்பேற்ற சில மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரியான வியூகம் அமைத்துத் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 40-ல் 39 எம்பிக்களை பெற்றனர், அதன் பிறகு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸ் 18 எம்.எல்.ஏக்களை பெற்றது. அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் ஏராளமான இடங்களில் வெற்றிபெற்றது.

இவை எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காலத்தில் நடந்தவைதான். இப்படி சிறப்பான பயணத்தில் கட்சி செல்லும்போது, தலைவரை மாற்றனும் என்று டெல்லிக்கு நடையாய் நடந்தது ஒரு குரூப். நடந்து ஓராண்டாகியும் மாற்றம் இல்லை. தலைவர் மாற்றம் இதோ, அதோ என்று எதிர் குரூப் செய்திகள் தட்டிவிட்டாலும் அழகிரியை அசைக்க முடியவில்லை. அவரும் மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். டெல்லி அறிவித்தால் புன்னகையுடன் விடைபெறுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
டெல்லி தலைமையானது டாக்டர் செல்லக்குமார் எம்.பி., கரூர் ஜோதிமணி எம்.பி ஆகியோரில் ஒருவரைத்தான் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக்க பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இதில் செல்லக்குமார் எம்.பி. மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், எம்.எல்.ஏ, எம்.பி. எனப் பதவி வகித்த அனுபவமும், பல்வேறு மாநிலங்களில் பொறுப்பாளராகவும் பணியாற்றிச் சோனியாவிடம் பாராட்டுப் பெற்றவர். ஆனால் திமுக கூட்டணியுடன் அவர் இணக்கமாகச் செல்வாரா? என்பதே அவரது மைனஸ் பாயிண்ட். ஜோதிமணியை பொறுத்தவரை, சிட்டிங் எம்.பி, என்பதைவிட ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தில் இறுதி வரை நடையாய் நடந்தவர். நல்ல பேச்சாளர். ராகுல் காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர் என்றும் சொல்லப்படுகிறது. இது போக, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், கார்த்திக் சிதம்பரம் எம்.பி., முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோரும் மாநில தலைவர் பதவிக்குக் குறிவைப்பதாக எமது டெல்லி தகவல் தெரிவிக்கிறது. கார்த்திக் சிதம்பரம் முன்னாள் நிதி அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரத்தின் மகன் என்பதை தவிர வேறு ப்ளஸ்பாயிண்ட் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை, ராகுலும் இவரை இப்போது விரும்பவில்லை என்றே தெரிகிறது. சு.திருநாவுக்கரசர் தனக்கு 2024 எம்பி தேர்தலில் சீட் வேண்டாம், அதற்குப் பதிலாக மாநில தலைவர் பதவியைக் கொடுங்கள் என்று கேட்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. ஒரு இந்து நாடாரை மாநில தலைவராக நியமித்தால் மட்டுமே பாஜகவுடன் மல்லுகட்ட முடியும், அதற்குச் சரியான ஆள் முன்னாள் எம்.பி.ராமசுப்புதான் என்று தென்மாவட்டங்களில் இருந்தும் ஒரு சவுண்டு வருகிறது. ஆலங்குளம் தொகுதியில் காங்கிரஸ் தனியாக நின்றபோது இரண்டு முறை ஜெயிச்சவராம், காங்கிரஸ் விவசாய பிரிவில் அகில இந்திய துணைத்தலைவராக வேறு இருக்கிறார். சோனியாவுக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்து பெரியவர் இளையபெருமாளுக்கு பிறகு காங்கிரசில் ஒரு தலித் தலைவர் இருந்ததில்லை. ஆகவே ஒரு தலித்தான் தலைவர் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவராக வரணும் என்ற முணுமுணுப்பும் சத்தியமூர்த்தி பவனில் அடிக்கடி கேட்கிறது. அந்த வகையில் சிட்டிங் எம்பி திருவள்ளூர் டாக்டர் ஜெயக்குமார், முன்னாள் எம்.பி காஞ்சிபுரம் விசுவநாதன் ஆகிய இருவருமே தகுதியானவர்கள்தான்.

ஆனால் செல்வப்பெருந்தகைக்கு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் தலைவருக்கான லிஸ்டில் ஜெயக்குமாரும், விசுவநாதனும் இந்த முறை இல்லை என்றே சொல்கிறார்கள். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் தான் தேசிய அரசியலில் கொஞ்ச காலம் இருந்துவிட்டு தமிழ்நாட்டுக்கு போகிறேன் என்று டெல்லி தலைமையிடம் சென்னதாகத் தகவல். சசிகாந்த் செந்தில் மாநில தலைவர் லிஸ்டிலும் இல்லை, அவர் கேட்டதும் இல்லை என்று தான் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். மத்தபடி அடுத்ததலைவர் சசிகாந்த் செந்தில் என்பதெல்லாம் கட்டுக் கதைதானாம். சசிகாந்செந்திலுக்கும், மோகன்குமார மங்களத்துக்கும் செயல்தலைவர் பதவி உறுதி என்றும் சொல்லப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றபின் ராய்ப்பூரில் நடந்த முதலாவது காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாட்டில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இந்த இடத்தில் கவனம் கொள்ளத்தான் வேண்டும். அந்தத் தீர்மானம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல்தலைவர் பதவியில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.

காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் பதவிக்கு அடுத்து பவர்புல் போஸ்ட்டிங் செயல் தலைவராம். முதன்முறையாகத் தமிழ்நாட்டுக்கு எம்.பிக்கள் எச்.வசந்தகுமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மற்றும் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்களம் ஆகியோரை டெல்லி தலைமை நியமனம் செய்தது. இதில் வசந்தகுமார் காலமாகிவிட்டார். மற்ற செயல் தலைவர் பதவியும் காலாவதியாகிவிட்டதால் அதற்கான அறிவிப்பும், புதிய மாநில தலைவர் நியமன அறிவிப்போடு சேர்த்து வரலாமென எதிர்பார்க்கிறார்கள். அதில் முக்கியமானவர்கள் சிறுபான்மை பிரிவில் அசன் மவுலானா எம்.எல்.ஏ, ஐஎன்டியூசி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் அமீர்கான், அகில இந்திய சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் முகம்மது ஆரீப் ஆகியோர் ஆவார்கள். இதில் அசன் மவுலானா, எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் எனப் பணிபுரிந்தவர், அடுத்து அமீர்கான், தற்போது காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளராக இருக்கும் இவரைத் தெரியாத கதர் சட்டைக்காரர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்குச் சிறுவயது முதலே கட்சியில் காங்கிரசில் இருப்பவர். உள்ளாட்சியில் பிரதிநிதியாக இருந்தவர், பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றிக் காங்கிரசுக்கு வெற்றியைக் கொடுத்தவர், முகம்மது ஆரீப் சிறுபான்மை பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியும், ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நடைபயணத்தில் இறுதிவரை நடந்தவர். மேலும் திருநாவுக்கரசர் எம்பி அவரது மகனும் எம்.எல்.ஏவுமான ராமச்சந்திரனுக்கும், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர். ராமசாமி தனது மகனும், எம்.எல்.ஏவுமான கருமாணிக்கத்துக்கும் செயல் தலைவர் பதவி கேட்டு வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில்தான் கடந்த மாதம் 20-ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் தினேஷ்குண்டுராவ் டெல்லி சென்று சோனியா, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம்பற்றி ஆலோசித்துவிட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சிறப்புச் செய்தியாளர்,
நீதிதேவதை.
ஜூன்.2023

திமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்ட்!

கோவையில்  ஐடி ரெய்டு நடக்கும் திமுக நிர்வாகி வீடு முன்பு குவிந்து வருபவர் களுக்கு பிஸ்கட், பிரியாணி, தண்ணீர், நாற்காலி விநியோகம் அமோகம்

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (மே 26) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், முக்கியமான  அரசு ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டின் முன்னால் கூடிய அவரது ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டின் முன்பு குவிந்துள்ள நபர்களுக்குப் பிஸ்கட், தண்ணீர் பாட்டில் உணவு பொட்டலங்கள் மற்றும் சேர் ஆகியவை கொடுத்து வருகின்றனர் திமுகவினர்

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே,
சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும்
உங்களை சுற்றி உள்ளவர்கள் நீங்கள் நினைத்ததை நடக்க விட மாட்டார்கள்

#மாண்புமிகுமுதல்வர்
ஸ்டாலின் அவர்களே,
—————————————
திடீரென்று பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன் அவருடைய இரண்டாவது வீடியோவை இன்று தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டார். எந்தவித உழைப்பும் இல்லாமல் உங்களால் பதவி கொடுக்கப்பட்ட மனிதர் அவர். அரசியலில் அவரை உச்சத்தில் வைத்தீர்கள். சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பி ஆட்சி நடத்தினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் விட மாட்டார்கள்.
நேற்று வரை வெளியேயும் சட்டமன்றத்திலும் தி.மு.கவையும், தலைவர் கலைஞரையும் உங்களையும் திட்டியவர்களை எல்லாம் நீங்கள் அழைத்து அவர்களுக்கு பதவிகளை அள்ளித் தந்து கௌரவிப்பீர்கள். தி.மு.கவுக்காக உண்மையிலேயே உழைத்தவர்களைத் தள்ளி வைப்பீர்கள்; நீக்குவீர்கள். நன்றாக இருக்கிறது, உங்கள் அரசியலும் உங்களுடைய அறம் சார்ந்த அணுகுமுறைகளும்! வாழ்க தி.மு.க! வேறு என்ன சொல்ல முடியும்?

கலைஞர் ஐம்பது ஆண்டு காலம் கடுமையான சோதனை காலங்களிலும் தி.மு.க வைக் கட்டியமைத்து, வளர்த்துச் சென்றார். இப்போது என்ன சொல்ல?

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-4-2023.

%d