you are here Home » அரசியல்

அரசியல்

நெகமம் பத்திரபதிவு அலுவலகத்தில் புரோக்கர்கள் ஆதிக்கம் பணம் இருந்தால் மட்டுமே பத்திர பதிவு

கோவை மாவட்டம் நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்தில்  பதிவாளராக கலாவதி என்பவர் பணியாற்றி வருகிறார்  .
இந்த அலுவலகத்தில் தினந்தோறும்  கடன் பத்திரம், கிரைய பத்திரம் ,பவர் அக்ரிமெண்ட், திருமணப்பதிவு, வில்லங்க சான்றிதழ், நகல் பத்திரங்கள் எடுக்க  போன்ற  பணிகளுக்கு பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளன.
 பொதுமக்கள் நேரடியாக சென்று எந்த வேலையும் நடைபெறுவதில்லை,
மேலதிகாரியின் அனுமதி இல்லாமல் நெகமம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணினி ஆப்ரேட்டராக வெளி நபர்  பணி செய்து வருகிறார்.
லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு உரிய ஆவணங்கள், பத்திரம் இல்லாமல் கிரயம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.
 பெருமளவில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டும்  பொள்ளாச்சியைச் சேர்ந்த பிரபு என்ற புரோக்கர் மூலமாக அனைத்து பத்திர பதிவு  வேலை மதிப்புக்கு தகுந்தபடி தகுந்தபடி ரூ.10 ஆயிரம் முதல் லட்சத்திற்கு மேல் இவர் மூலமாக லஞ்சமாக பெறப்பட்டு வருகிறது. புரோக்கர் வீட்டிற்கு தினமும்  எடுத்துச் செல்கிறார் பதிவாளர் கலாவதி  பணி முடிந்து செல்லும்போது புரோக்கர் வீட்டுக்கு சென்று  சென்று பணத்தை பெற்றுக் கொள்கிறார்.  இதுவரை வாங்கிய லஞ்ச பணத்தில் பொள்ளாச்சி, கேரளா போன்ற பகுதிகளில் சொகுசு பங்களா, தோட்டம் காலியிடம் போன்றவை வாங்கி குவித்துள்ளார். சொத்துக்களை தங்களது மருமகன் பெயரிலும் ,சம்பந்தி பெயரிலும் லஞ்சப் பணத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கியுள்ளதாக பொதுமக்கள் புகாராக உள்ளது. தங்க நாணயம் மற்றும் தங்க நகையும் பெரும் அளவு வாங்கி உள்ளார். இவர் பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் பினாமி பேரில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறை அதிகாரிகளும், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் ஆய்வு செய்ய வேண்டும். நெகமம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்று இவர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை மறு ஆய்வுகள் மேற்கொண்டால் கண்டிப்பாக ஜெயிலுக்கு போவது உறுதியாய் விடுகிறது. இவருக்கு உறுதுணையாகும், பாதுகாப்பாகவும்              கோவை தெற்கு மாவட்ட பதிவாளர்  ராஜா என்பவருக்கு மற்றும் மேலதிகாரிகளுக்கு வாங்கும் லஞ்சப் பணத்தில் மாதம் மாதம் பங்கு செல்வதால் இவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தலைவர் ரேசில் 9 பேர்

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டவர் கே.எஸ்.அழகரி. பொறுப்பேற்ற சில மாதங்களில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரியான வியூகம் அமைத்துத் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 40-ல் 39 எம்பிக்களை பெற்றனர், அதன் பிறகு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு காங்கிரஸ் 18 எம்.எல்.ஏக்களை பெற்றது. அதன்பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் ஏராளமான இடங்களில் வெற்றிபெற்றது.

இவை எல்லாம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி காலத்தில் நடந்தவைதான். இப்படி சிறப்பான பயணத்தில் கட்சி செல்லும்போது, தலைவரை மாற்றனும் என்று டெல்லிக்கு நடையாய் நடந்தது ஒரு குரூப். நடந்து ஓராண்டாகியும் மாற்றம் இல்லை. தலைவர் மாற்றம் இதோ, அதோ என்று எதிர் குரூப் செய்திகள் தட்டிவிட்டாலும் அழகிரியை அசைக்க முடியவில்லை. அவரும் மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். டெல்லி அறிவித்தால் புன்னகையுடன் விடைபெறுவார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். Read More

சிறப்புச் செய்தியாளர்,
நீதிதேவதை.
ஜூன்.2023

[/vc_column][/vc_row]

திமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்ட்!

கோவையில் ஐடி ரெய்டு நடக்கும் திமுக நிர்வாகி வீடு முன்பு குவிந்து வருபவர் களுக்கு பிஸ்கட், பிரியாணி, தண்ணீர், நாற்காலி விநியோகம் அமோகம் Read More

[/vc_column][/vc_row]
மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களே,
சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும்
உங்களை சுற்றி உள்ளவர்கள் நீங்கள் நினைத்ததை நடக்க விட மாட்டார்கள்
[/vc_column][/vc_row]

#மாண்புமிகுமுதல்வர்
ஸ்டாலின் அவர்களே,
—————————————
திடீரென்று பழனிவேல் ராஜனின் மகன் தியாகராஜன் அவருடைய இரண்டாவது வீடியோவை இன்று தெருவுக்குக் கொண்டு வந்துவிட்டார். எந்தவித உழைப்பும் இல்லாமல் உங்களால் பதவி கொடுக்கப்பட்ட மனிதர் அவர். அரசியலில் அவரை உச்சத்தில் வைத்தீர்கள். சிறப்பாக ஆட்சி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பி ஆட்சி நடத்தினாலும், உங்களைச் சுற்றியுள்ளவர்கள் விடமாட்டார்கள். Read More

[/vc_column][/vc_row]


Discover more from நீதிதேவதை மாத இதழ்

Subscribe to get the latest posts sent to your email.